×

விஜயவாடா அடுத்த கேபி நகர் பகுதியில் பைக் ஷோரூம் தீ விபத்தில் பலகோடி மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து சேதம்

*தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

திருமலை : விஜயவாடாவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கேபி நகர் பகுதியில் நேற்று தனியார் பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பலகோடி மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசமானது.ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கேபி நகர் பகுதியில் தனியார் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது.

இங்கு விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த இருசக்கர வாகனங்களின் மைய அலுவலகம் என்பதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் குடோன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்தது. இங்கு எலக்ட்ரிக் வாகனத்துடன், பெட்ரோல் பைக் விற்பனை மற்றும் சர்வீஸ் மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த ஷோரூம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த ஷோரூமில் இருந்து புகை கிளம்பி தீ பற்றி எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் குடோனில் மின்சார வாகனங்கள் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் வந்து தீயை போராடி அணைத்தனர். ஆனால் அதற்குள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, எலக்ட்ரிக் வாகனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடித்து கொண்டதா? அல்லது மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததா? வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் புதிய வாகனங்கள், சர்வீஸ் செய்ய வந்த வாகனங்கள் எரிந்து நாசமாகி கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் அருகே அதிக அளவில் மின்சார வாகனங்களை நிறுத்தி சார்ஜ் ஏற்றியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரே பகுதியில் இரண்டு வகையான வாகனங்கள் வைத்துள்ள நிலையில், இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.

The post விஜயவாடா அடுத்த கேபி நகர் பகுதியில் பைக் ஷோரூம் தீ விபத்தில் பலகோடி மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Kabi Nagar ,Vijayawada ,Tirumalai ,Chennai ,Kolkata National Highway ,Dinakaran ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...